சிவசாகர்: அசாமில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘அசாமில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’ என வாக்குறுதி தந்துள்ளார். அசாமில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார். சிவசாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: அசாம் ஒப்பந்தம் அமைதிக்காகவும், இம்மாநிலத்தை பாதுகாக்கவும் கொண்டு வரப்பட்டது. நானும் எனது கட்சியினரும் இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு கொள்கையையும் பாதுகாப்போம். பாஜ.வும், ஆர்எஸ்எஸ்.சும் அசாமை பிளவுபடுத்த முயற்சிக்கின்றன.