25 தொகுதிகளில் தமாகா தனி சின்னத்தில் போட்டி: விடியல் சேகர் பேட்டி

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், குமரி மாவட்ட தமாகா மாணவரணி ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில செயலாளர் விடியல் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும்  சட்டமன்ற தேர்தலில் தமாகா, அதிமுக கூட்டணியில் போட்டியிடும். 25 தொகுதிகள் கேட்டுள்ேளாம். தனி சின்னத்தில் போட்டியிடுவோம்.  பயிர் கடன் தள்ளுபடி, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 சதவீத உள் இடஒதுக்கீடு,  மினி கிளினிக் உள்ளிட்ட அதிமுக அரசின் சாதனைகளை  மக்களிடம் எடுத்துரைத்து பிரசாரத்தில் ஈடுபடுவோம். அதிமுக கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. மத்திய அரசும் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கிறது. மத்தியில் ஊழலற்ற  ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: