கள்ளுக்கு விடுதலை இல்லையா? அதிமுக அரசுக்கு எதிராக வியூகம்

தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. அதன் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கள்ளுக்கான விடுதலை கேட்டு  தொடர்ந்து போராடி வருகிறோம். வரும் 27ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னம்பலம் என்ற ஊரில் கள் இறக்கும் போராட்டம் நடக்கிறது. தொடர்ந்து, மார்ச் 13ம் தேதி ஈரோட்டில், கள் விடுதலை மாநாடு நடத்த ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு திருப்புமுனை மாநாடாக இருக்கும். கள்ளுக்கு விடுதலை அளித்தால், அதிமுக அரசை தக்க வைத்துக்கொள்ள முடியும். தேர்தலுக்கு முன்பு கள்ளுக்கான விடுதலை அளிக்க வேண்டும். இல்லையெனில், தேர்தல்  சமயத்தில் அதிமுக அரசுக்கு எதிரான வியூகம் அமைப்போம் என்றார்.

Related Stories: