புதுடெல்லி:நாடா ளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடந்தது. இதற்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அளித்த பதிலில் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில், நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்கும் நோக்கில் வலுவான நிதி தொகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏழைகளுக்காக அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதில் குறை கண்டுபிடிப்பதை தற்போது எதிர்க்கட்சிகள் வழக்கமாக்கி கொண்டுள்ளன. அரசு முதலாளித்துவ நண்பர்களுக்காக மட்டுமே செயல்படுவதாக கூறுகின்றன.பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.67 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப் பட்டுள்ளன. 2.67 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பி 2,11,192 கி.மீ. தூரத்துக்கு கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்கள் பணக்காரர்களுக்கானதா?