சென்னை: நீட் தேர்வுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் சொல்லியிருப்பது வெட்கக் கேடானது என்று வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு தனியார் வணிகக் கொள்ளைக்கு வழி வகுக்கும் என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறோம். இதனையெல்லாம் உறுதிப்படுத்தும் விதமாக, மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என்றும் அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்றும், அதனால் தான் தனியார் மூலம் இணைய வழியில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் கொஞ்சம் கூட வெட்கமின்றி கூறுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.