சென்னை: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்தியங்கராதேவி கோயிலுக்கு நேற்று வந்தார். பின்னர், ‘நிகும்பலா’ யாகத்தில் கலந்து கொண்டு ரகசிய பூஜை செய்து விட்டு சென்றார். இந்த ரகசிய பூஜையில், சில அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இந்த கோயிலில் அமாவாசை தினத்தன்று நடைபெறும் ‘நிகும்பலா’ யாகத்தில் கலந்து கொண்டால் எதிரிகளின் தொல்லை விலகும் என்பது நம்பிக்கை. அந்தவகையில், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் இங்கு வந்து வழிபட்டு சென்றனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்கனவே சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டவர்.