சேலம் உட்பட 9 மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த 777 ஓவர்சீயர் பணிக்கான தேர்வு திடீரென ரத்து..!!

சென்னை: சேலம் உட்பட 9 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நாளை நடைபெற இருந்த 777 ஓவர்சீயர் பணிக்கான தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம், விழுப்புரம், நீலகிரி, கரூர், தேனி, திருப்பத்தூர், தஞ்சை, தென்காசி, அரியலூர் மாவட்டங்களில் நாளை எழுத்து தேர்வு நடைபெற இருந்தது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களிலும் தேர்வு நடைபெறவிருந்தது. காரணம் எதுவும் கூறப்படாமல் தேர்வு ரத்தானதால் விண்ணப்பித்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: