புதுடெல்லி : விவசாயிகளின் போராட்டத்தை மதம், சமூகத்துடன் இணைக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு சிரோன்மணி கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் தொடர்பாக நேற்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது, ‘விவசாய சீர்திருத்தங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். விவசாய சீர்திருத்தங்கள் விஷயத்தில் காங்கிரஸ் ‘யு-டர்ன்’ போட்டுள்ளது. வேளாண் சட்ட விவகாரம் அரசியலாக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை பரப்பாதீர். பிரச்னைகளை தீர்க்க முடியும். இந்தியாவை சீர்குலைக்க சிலர் விரும்புகின்றனர். சிலர் பஞ்சாப் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர்’ என்று பேசினார்.