செய்யாறு :செய்யாறு நந்தீஸ்வரர் கோயிலில் நேற்று நடந்த பிரதோஷ வழிபாட்டில் பசு ஒன்றும் கலந்து கொண்டதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.செய்யாறு டவுன் கிரிதரன்பேட்டையில் தையல்நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர்.