பழநி: வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.டி.உதயகுமார் நேற்று நேற்று காலை பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிவாரத்தில் முடி காணிக்கை செலுத்தினார். தொடர்ந்து படிப்பாதை வழியாக நடந்தே கோயிலுக்கு சென்றார்.
விஸ்வரூப தரிசனத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து திருஆவினன்குடி கோயில் மற்றும் பாத விநாயகர் கோயில்களில் தரிசனம் செய்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், ‘‘சசிகலா வருகையால் அதிமுகவில் பிளவு ஏற்படுமா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் மறுப்பு தெரிவிக்காமல் சிரித்தார்.