பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ் தலைமையிலான அமைச்சரவையில் நேற்று புதிதாக 20 அமைச்சர்கள் பதவியேற்றனர். பீகாரில் பாஜ - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ் குமார் முதல்வராக இருக்கிறார். நிதிஷ் பதவியேற்றபோது அவருடன் 14 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். இம்மாநில சட்டப்பேரவை பலத்தின்படி, 36 அமைச்சர்கள் நியமிக்கப்படலாம். எனவே, அமைச்சரவை விரிவாக்கம் பற்றி பாஜ - ஐஜத இடையே பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதில் முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், 20 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.