சென்னை: சசிகலா ஒரு காலாவதி மாத்திரை. அவரால் கட்சிக்கு எந்த பயனுமில்லை என அதிமுக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, திண்டுக்கல் சாலையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் 104வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் பாஸ்கரன், செய்தி தொடர்பாளர்கள் வைகைச்செல்வன், மருதுஅழகுராஜ் பங்கேற்றனர். கூட்டத்தில் வைகைச்செல்வன் பேசியதாவது: சசிகலாவை பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் தீர்மானம் வாசித்தது நான்தான். நாங்கள் உங்களை ஏற்றுக் கொண்டோம். அதிமுக உங்களுக்காக வாசலைத் திறந்து வைத்திருந்தது.