பெங்களூரு: குடிநீருக்கு பயன்படுத்தும் ஏரிகளில் மாசு கலந்த நீரை திறந்துவிடும் தொழிற்சாலைகளை கண்காணிக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் 8 மண்டல துணை ஆணையர்களுக்கு இது தொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏரிகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு நீர் ஏரிகளில் கலப்பதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டுள்ளது. மாசு நீர் கலந்தால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, பொதுமக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும்.