திமுக கூட்டணி வெற்றி உறுதி அதிமுக-பாஜ கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள் : பாலகிருஷ்ணன் திட்டவட்டம்

குலசேகரம்:கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஆற்றூரில் முன்னாள் எம்எல்ஏ ஹேமசந்திரன் நினைவு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்பு விழா மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: இன்று உலகே இந்தியாவை உன்னிப்பாக கவனிக்கிறது. தலைநகர் டெல்லியில் அனைத்து சாலைகளையும் முடக்கி 70 நாட்களுக்கு மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருவது தான் இதற்கு காரணம்.

நாடாளுமன்றத்தில் விவசாய சட்டம் குறித்து விவாதிக்க அனுமதியில்லை. எதிர்ப்பு கோஷமிடுபவர்களை வெளியே அனுப்பி விட்டு அவசரம் அவசரமாக சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். நல்ல சட்டம் என்றால் ஏன் அவசரம் காட்ட வேண்டும்.

இந்திய அரசு அத்தியாவசிய பொருளான உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி அதன்மூலம் உணவு பதுக்கலை தடுத்து வந்தது. தற்போது வேளாண் சட்டம் மூலம் கார்ப்பரேட்டுகள் உள்ளே நுழைகின்றனர். அத்தியாவசிய உணவு பாதுகாப்பு சட்டமும் இந்த சட்டத்தால் நீர்த்து போய்விட்டது. இதன்மூலம் உணவு பொருள் பதுக்கல் என்பது சேமிப்பு என்ற முறையில் பார்க்கப்படுகிறது. தமிழக மக்கள் அதிமுக-பாஜ கூட்டணியை ஒருேபாதும் ஏற்க மாட்டார்கள். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: