திருவாரூர்: புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள் இல்ல திருமணம் திருவாரூர் அருகே பெத்தாரண சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேமுதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மக்களுக்கு எதிரான திட்டங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆகியவற்றினை மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கும்போது அரசு எப்படி நடத்த முடியும். இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.