சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழுவை எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் களப்பணிகளை கடந்த ஆறு மாதங்களாக முன்னெடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணிக்குழுவில் ராஜா முஹம்மது, எஸ்.வி.ராஜா, ராஷிக், பக்ருதீன், யாசர் கனி, சிக்கந்தர், இல்யாஸ், ஹுசைன், முஸம்மில், பஹத், ராயல் கரீம், அஜிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.