திருவனந்தபுரம்: சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்கு தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு தேவஸம்போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மண்டல, மகர விளக்கு காலத்தில் பக்தர்கள் அனுதிக்கப்பட்டனர். முதலில் தினசரி 1,000 பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பக்தர்களும் அனுதிக்கப்பட்டனர். அதன்பிறகு இந்த எண்ணிக்கை 5,000 ஆக உயர்த்தப்பட்டது. அதுபோல முதலில் ஆன்டிஜன் பரிசோதனையும், டிசம்பர் 30ம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டது.