காவேரிப்பாக்கம் அருகே குண்டும் குழியுமான தார்சாலையால் அவதி-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அருகே குண்டும் குழியுமான தார்சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சேரி அய்யம்பேட்டை ஊராட்சி. இப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் 108திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் பரமபதநாதர் கோயில், ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன.

இந்நிலையில்  சேரிஅய்யம்பேட்டை  பகுதியில் இருந்து  கட்டளை  வழியாக காவேரிப்பாக்கம் செல்லும் தார்சாலை சுமார் 5கிலோமீட்டர் தொலைவுக்கு ஆங்காங்கே ஜல்லிகற்கள் பெயர்ந்தும், முள்புதர் மண்டியும் தார்சாலையை ஆக்கிரமிப்பு செய்து காணப்படுகின்றன.   இதனால் இவ்வழியாக வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.            

எனவே அரசு அதிகாரிகள் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, இந்த குண்டும் குழியுமான தார்சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: