நான் கத்துக்குட்டி இல்ல.. சிங்கக்குட்டி: கேப்டன் மகன் ‘கர்புர்’

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில்  தேமுதிக கட்சி கொடியேற்று விழா, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு கட்சியின் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியதாவது: விஜயகாந்த் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் தேர்தலுக்கு முன்பாக பொதுமக்களிடையே பிரசாரத்தில் ஈடுபடுவார். எல்லோரும் என்னை கத்துக்குட்டி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் சிங்கத்தின் குட்டியாக வந்து உங்களிடம் பேசி கொண்டிருக்கிறேன். விஜயகாந்த்தை தலைவனாக பார்த்து வளர்ந்தவன் நான். எனவே எனது ரத்தத்திலும் தேமுதிக கட்சியின் கொள்கை உள்ளது. வரும் வழியெல்லாம் விஜயகாந்த் பாடல்கள் ஒலித்தது. அதேபோல் அவரது குரல் கோட்டையில் ஒலிக்க கட்சியினர் அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

Related Stories: