மதுரை: மதுரை ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் சாய்சரண் உயிரிழந்தார். கடந்த 22 மணி தேதி இதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் திருமலேஷ் உயிரிழந்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக கொரோனா தொற்று அதிகரித்து தற்போது குறைந்துவரும் நிலையில், மதுரையில் டெங்கு காய்ச்சலின் வேகம் அதிகரித்து வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ் ஆலங்குளம் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் வசித்துவரும் சத்தியபிரியா என்பவரின் இரண்டு மகன்களுக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.