சென்னை: சென்னை திருவேற்காடு அடுத்த காடுவெட்டியில் முதல்வர் பிரச்சார மேடை அருகே பொதுமக்கள் சாலை மறியல் செய்துள்ளனர். முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடம் அருகே உள்ள குடியிருப்புகளை அகற்றுவதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கக்கோரி சாலையில் பொதுமக்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.