பிரசாரத்துக்கு போகாமல் ஓட்டு வாங்கும் பினராய்

கேரளாவில் காங்கிரஸ் மூத்த தலைவரான கே.சுதாகரன், `கள் இறக்கும் குடும்பத்தை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், தான் செல்வதற்காக ஹெலிகாப்டர் வாங்கி உள்ளார். இதற்காக வெட்கப்படுவதா அல்லது பெருமைப்படுவதா என்பது இடது முன்னணியினரின் விருப்பம்,’ என்று ஒரு பேரணியில் பேசினார். இது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. அதுவும், காங்கிரஸ் எம்எல்ஏ ஷானிமோல் உஸ்மான், சுதாகரனை மன்னிப்பு கேட்க கோரினார். இடது முன்னணியினரே அமைதியாக இருக்கும்போது, கட்சியை சேர்ந்தவரே மன்னிப்பு கேட்க சொன்னது சுதாகரனுக்கு தர்ம சங்கடமானது. ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, ``நான் முதல்வரின் ஜாதியை பேசவில்லை. குடும்பத் தொழில் குறித்துதான் பேசினேன். இதற்காக மன்னிப்பு கேட்க தேவையில்லை,’ என்று தனது அடிப்பொடிகளிடம் கூறினாராம். காங்கிரசுக்குள்ளேயே தலைவர்கள் இப்படி முட்டிக் கொள்வது, முதல்வர் பினராய் விஜயனுக்கு பிரசாரமே செய்யாமல் ஓட்டு கிடைத்த மாதிரி உள்ளதாக, கம்யூனிஸ்ட் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: