ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இன்று இயங்காது

புதுச்சேரி, மார்ச் 8: ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளதால், ஜிப்மர் மருத்துவமனையில்  இன்று வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று (8ம் தேதி) மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. எனவே ஜிப்மர் மருத்துவமனையில் இன்று வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனினும் அவசர சேவைகள் பிரிவு வழக்கம் போல் இயங்கும். நாளை (9ம் தேதி) முதல் வழக்கம் போல் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது….

The post ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இன்று இயங்காது appeared first on Dinakaran.

Related Stories: