அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சென்னை மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சரத்குமார் மேடையில் பேசியதாவது, “1996ம் ஆண்டு திமுக ஆட்சி அமைக்க முக்கியக் காரணமாக இருந்தவன் நான். அப்போது கருணாநிதியிடம் நாம் 50 சீட்டு கொடுங்கள் என்று கேட்டு ஒரு இயக்கத்தை ஆரம்பித்து இருந்திருந்தால் இன்று நான்தான் முதலமைச்சர். இதுவரை சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். ஆனால் தேர்தலின்போது இரண்டு மூன்று சீட்டு கொடுக்கும் பட்சத்தில் நாம் தனித்து போட்டியிடும் நிலமை வரும் அதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.