தேர்தல் வர உள்ளதால், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டம் முழுவதும் ஸ்டேஷன் வாரியாக பிரச்னைக்குரிய கிராமங்கள், நபர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ளதா, எந்த மாதிரியான பிரச்னைக்கு வாய்ப்புள்ளது என தரவுகள் சேகரித்து பிரச்னைக்குரிய கிராமங்கள், பகுதிகளில் கூடுதலா கண்காணிக்கப்படும். கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நபர்களை கணக்கெடுக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. சிறையில் உள்ளவர்கள், வெளியில் உள்ளவர்கள், கடந்த பல ஆண்டுகளாக எந்த பிரச்னையிலும் ஈடுபடாமல் உள்ளவர்கள், தற்போதும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என பல்வேறு பிரிவுகளில் கணக்கெடுக்கப்படுகிறது. ஒவ்வொருவரின் மீதும் மொத்தம் எத்தனை வழக்குகள் உள்ளன எனவும் கணக்கெடுப்பு நடக்கிறது.