சொந்த ஊரான மன்னார்குடியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர்

மன்னார்குடி: சொந்த ஊரான மன்னார்குடியில் சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து விடுதலையான சசிகலாவுக்கு ஆதரவாக நெல்லை மாவட்டத்தில் வரவேற்பு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி சுப்ரமணிய ராஜா, திருச்சி ரங்கத்தில் பேனர் வைத்த அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக மாவட்ட பிரதிநிதியும், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் வார்டு உறுப்பினருமான புலியூர் அண்ணாத்துரை ஆகியோர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அதிமுக ஒன்றிய சிறுபான்மை அணி செயலாளர் குத்புதீன், சசிகலா விடுதலையை வரவேற்று போஸ்டர் அச்சடித்து நேற்று பல இடங்களில் ஒட்டினார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பஸ் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் இன்று அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சதஷ்குமார் என்பவர் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளார்.

Related Stories: