சென்னைப் புறநகர் பகுதியை ஒட்டிய சட்டமன்ற தொகுதியான திருப்போரூரை தற்போது பலரும் குறி வைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர். குறிப்பாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வருகின்ற தேர்தலில் தனக்கு ஆவடியில் டெபாசிட் கிடைத்தாலே பெரிது என்ற நிலை. காரணம் சமீபத்தில் அவருக்கு எதிராக கட்சி தலைமையகத்தில் திரண்டவர்கள்... கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அலை எழுந்துள்ளதாம். இதனால தான் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஆவடியில் இருந்து சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக தென்முனையில் இருக்கும் திருப்போரூரரை கேட்டு வாங்கிக் கொண்டதாக ஆவடியிலும் திருப்போரூரிலும் தொண்டர்களிடம் ஒரே பேச்சாக உள்ளது.