தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி பொதுமக்களுக்கு போர்வெல் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.கடந்த ஓராண்டுக்கு முன் குடிநீருக்கான போர்வெல் பழுதானது.இந்த போர்வெல் பழுதை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.இந்நிலையில் நேற்று காலை தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நோக்கி மேல மைக்கேல் பட்டி கிராம பெண்கள் காலி குடங்களுடன் ஊர்வலமாக சென்று, ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடனர்.