திரிணாமுல் காங்கிரசிலிருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகுகிறார். மேற்கு வங்க மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளும்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள், முக்கிய தலைவர்கள் பலர் வெளியேறி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பாஜவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டைமண்ட் ஹார்பர்  தொகுதி எம்எல்ஏ தீபக் ஹால்டர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விரைவில் ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். அ்வர் கூறுகையில், ‘‘நான் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். கடந்த 2017ம்  ஆண்டில் இருந்து நான் முறையாக எனது பணிகளை செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இது குறித்து கட்சி தலைமையிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கட்சியில் இருந்து விலகுவதற்கு முடிவு  செய்துள்ளேன். விரைவில் எனது ராஜினாமா கடிதத்தை மாநில தலைவருக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன் என்றார். இது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: