குடிபோதையில் அகதியை கத்தியால் குத்தியவர் கைது

புழல்: புழல் காவாங்கரை பகுதி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த தவபிரியன்(21), ஹரிசன்(21). நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் செங்குன்றத்தில் நடைபெற்ற தங்கள் நண்பரின் திருமண வரவேற்பிற்கு சென்றனர். அப்போது முகாமின் கேட் அருகே கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகுமார்(25) குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த, தவபிரியன், ஜெயகுமாரிடம் வழி விடுமாறு கேட்டார். இதனால், அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஜெயகுமார் பக்கத்தில் இருந்த வீட்டில் நுழைந்து அங்கிருந்த கத்தியை எடுத்து தவபிரியனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகுமாரை கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

Related Stories: