ஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம் அருகே ஒத்தையூர் கிராம சாலை மிகவும் சேதமடைந்து சகதி காடாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் ஒத்தையூரில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் தேவைக்காக தினமும் பொரூர், கள்ளிமந்தையம், ஒட்டன்சத்திரம், பழநி, தாராபுரம் ஆகிய பகுதிகளுக்கு ஒத்தையூர் சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இச்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.