சசிகலாவை அதிமுகவில் 100% சேர்த்துக்கொள்ள மாட்டோம்: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

சென்னை: சசிகலாவை அதிமுகவில் 100 சதவீதம் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: சசிகலாவுக்கு ஆதரவாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் டிவிட்டர் பதிவு போட்டு இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். மனிதாபிமானத்துடன் சொல்லியதாக தெரிவித்து இருக்கிறார். அறம் வழியில் செல்ல வேண்டும், அரசியலில் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவித்து இருக்கிறார். இதை கவனித்து பார்க்க வேண்டும்.

சசிகலாவையும், அமமுகவையும் 100 சதவீதம் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். இது தான் எங்கள் நிலைப்பாடு. அதிமுகவை யாரும் அசைத்துக்கூட பார்க்க முடியாது. சசிகலா குடும்பத்தை பொறுத்தவரையில் பொதுவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சசிகலா இல்லாமலே கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செல்கிறது. எனவே அதற்கான வாய்ப்பு இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: