ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் சண்டையிட்ட 2 பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் போலீசில் சரண்

ஜம்மு: ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் சண்டையிட்ட 2 பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் சரண் அடைந்தனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெல்ஹார் பகுதியில் காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.  அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் திடீரென பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த தொடங்கினர்.  இதற்கு படையினரும் பதிலடி கொடுத்தனர்.  

நீண்டநேரம் நடந்த இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதிக்கு காயம் ஏற்பட்டது. இதுபற்றி காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பாதுகாப்பு வீரர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகள் தங்களது ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு சரண் அடைந்துள்ளனர். இந்த சண்டையில் காயமடைந்த பயங்கரவாதியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: