சென்னை,:அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியான கூட்டணி என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.தொழில் அதிபர்கள் ஸ்ரீவித்யா, முத்துக்குமார், எழுத்தாளர் லதா ஆகியோர் நேற்று சென்னை கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு பா.ஜ.க. தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, பொன்னாடை அணிவித்து உறுப்பினர் அட்டையை வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர்கள் அண்ணாமலை, வி.பி.துரைசாமி, நடிகை குஷ்பூ, மாநில ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.