செய்யூர்: தினகரன் செய்தி எதிரொலியாக அரியனூர் ஊராட்சி கிராம சேவை மையத்தில் மினி கிளினிக் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கிராம புறங்களில் தமிழக அரசு சார்பில் 2000 மினி கிளினிக் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியிலும், அதற்கான பணிகள் நடக்கின்றன. இப்பகுதியில் மினி கிளினிக் அமைப்பதற்காக அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர். ஆனால் கிளினிக் அதற்கான போதிய இடம் இல்லை.