சென்னை: விருகம்பாக்கத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் ஊர்வலத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் வீரர்களின் வீரவணக்க நாளை முன்னிட்டு நேற்று காலை விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவில் இருந்து மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து தியாகி ஒய்.அரங்கநாதன் நினைவிடத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.