பைக்குகள் மீது கார் மோதி பெண் உட்பட 4 பேர் பலி

பெங்களூரு: இரண்டு பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  பாகல்கோட்டை மாவட்டம் ரபகவி-பனஹட்டி தாலுகா சிம்மட கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவாபிதரி (32), இவரது தாய் யமனவ்வாபிதரி (58). மற்றும் விஜயபுரா மாவட்டம் பபலேஷ்வர தாலுகா ஹொக்கும்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹனுமந்தகம்பலே (38), அமோபி டவலேஷ்வர் (36). இவர்கள் சம்பவத்தன்று காலை இரண்டு பைக்குகளில் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா அலகூரு கிராமத்தின் அருகே சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முதலில் ஒரு பைக் மீது மோதியது. பின்னர் 100 மீட்டர் தூரத்தில் சென்றுக்கொண்டிருந்த மற்றொரு பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்ட பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இதை பார்த்த கார் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து ஜமகண்டி ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. த போலீசார் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: