கம்பம்: கம்பம் சேனை ஓடையில் கொட்டப்படும் குப்பைகளால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கம்பம் நகரின் மைய பகுதியில் செல்கிறது சேனை ஓடை. நகரில் உள்ள வீடுகள், கடைகள், ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஓடையில்தான கலக்கிறது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரியது. அதன்பின் ஓடையில் மழைநீரும், கழிவுநீர் தடையின்றி சென்றது. தற்போது காமராஜர் சிலை அருகே கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் சேனைஓடை குறிக்கிடும் பாலத்தின் அடியில், குப்பை- இறைச்சி கழிவுகளால் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது.