பெங்களூரு: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 140 நாட்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள நடிகை ராகிணி திவேதியை ஜாமீனில் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் போதை பொருள் புழக்கத்தில் விடும் புகாரில் 20க்கும் மேற்பட்டவர்களை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வா மகன் ஆதித்யா ஆல்வா, கேரளா மாநில முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணனின் மகன், கன்னட திரைப்பட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி உள்பட பலர் அடங்குவர். ேபாதை பொருள் வழக்கில் நடிகை ராகிணியை கடந்தாண்டு செப்டம்பர் 4ம் தேதியும், கல்ராணியை செப்டம்பர் 8ம் தேதி சிசிபி போலீசார் கைது செய்தனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.