பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி சோலாடி தனியார் தேயிலைத்தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது. பந்தலூர் அருகே சேரம்பாடி தனியார் தேயிலைத்தோட்டம் பகுதியில் நேற்று ஏராளமான பெண்கள் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்த தொழிலாளர்கள் பீதியில் சத்தமிட்டு தோட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.அவர்கள் சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.