விசித்திரன் தலைப்புக்கு தடை தயாரிப்பாளருக்கு சிவில் கோர்ட் நோட்டீஸ்

சென்னை: சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். சி.எஸ்.கே. புரடெக்‌ஷன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் 2015ம் ஆண்டு விசித்திரன் என்ற தலைப்பை  தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை  புதுப்பித்து வந்துள்ளார். இந்நிலையில் விசித்திரன் என்ற அதே  தலைப்பை பயன்படுத்தி ”பி ஸ்டுடியோ” என்ற நிறுவனத்தின் மூலம் இயக்குனர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேசும் தயாரித்து வருகின்றனர். ஆர்.கே.சுரேஷ் அதில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது விசித்திரன் தலைப்பில் படத்தை தயாரிக்க தடைவிதிக்க கோரி சதீஷ்குமார் சென்னை 14-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு  வந்தது. அப்போது இதுகுறித்து  பி.ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குனர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 25ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Related Stories: