சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பன்னாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் இருந்து மக்காச்சோளம் மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி உடுமலை செல்வதற்காக நேற்று அதிகாலை திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. காலை 6 மணியளவில் 26-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது.