மதுரை: பொதிகை டி.வி.யில் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புவதை எதிர்த்த வழக்கு ஐகோர்ட் கிளையில் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம், இதனை விட முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன என்று தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளார்.