தமிழகம் ஸ்ரீரங்கம் கோயில் ஐயர் நியமனம் தொடர்பான அறிவிப்பு: ரத்து செய்து கோயில் இணை ஆணையர் உத்தரவு May 12, 2021 ஸ்ரீரங்கம் கோயில் திருச்சி ஸ்ரீரங்கம் அய்யனார் கோயில் மாரிமுத்து ஸ்ரீரங்கம் கோயில் தின மலர் திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் ஐயர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் 51-வது ஐயர் நியமனம் தொடர்பாக கோயில் வலைதளத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் கோயில் நிர்வாகம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் 51-வது ஐயர் பட்டத்திற்காக காலியாக உள்ள பதவிக்கு, தகுதி உடையவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை வழக்கமாக கோயில் நிர்வாகம் மூலமாக தான் ஐயர் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோயில் வலைதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயில் ஐயர் நியமன விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் நியமனம் தொடர்பான அறிவிப்பை கோயில் இணை ஆணையர் ரத்து செய்துள்ளார். … The post ஸ்ரீரங்கம் கோயில் ஐயர் நியமனம் தொடர்பான அறிவிப்பு: ரத்து செய்து கோயில் இணை ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: கடமை தவறும் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு
பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை: ஆசிரியர் சங்கம், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
கனமழையால் திடீரென கொட்டிய தண்ணீர் ; சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் குற்றால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாணவன் பலி: அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை 13 இணை பேராசிரியர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை தீர்ப்பு
நீலகிரி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ இன்று முதல் 3 நாட்களுக்கு ஊட்டிக்கு யாரும் வராதீங்க… கலெக்டர் வேண்டுகோள்
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சார்பில்மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 6,100 பேர் பயன்: சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பேச்சு
லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிய குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பரிந்துரை பெண் வழக்கறிஞருக்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு