அறந்தாங்கி: ஆவுடையார்கோவில் அருகே ஏரியின் மடையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சுமார் 75 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் தண்ணீர் மூழ்கி சேதமடைந்தன.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள பெரும்பாலான பாசன ஏரிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டின. ஏரிகளில் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், ஏரியின் உபரி நீர் போக்கி வழியாகவே வெளியேறி வருகிறது. இந்நிலையில் கதிராமங்கலம், நல்லிக்குடி, சடையாமங்கலம் ஆகிய 3 ஏரிகளின் உபரிநீரும் உபரி நீர் போக்கி வழியாக கடந்த சில நாட்களாக வெளியேறி வருகிறது. இந்த ஏரிகளில் இருந்து வெளியேறி வரும் உபரிநீர் ஆலமங்களம் கண்மாயில் பாய்ந்து வருகிறது.