லக்னோ : இடிபட்ட பாபர் மசூதிக்கு பதிலாக அயோத்தியில் கட்டப்பட உள்ள பிரமாண்ட மசூதியின் கட்டுமான பணிகள் குடியரசு நாளான ஜனவரி 26ம் தேதி தொடங்குகின்றன.தன்னிப்பூர் என்ற கிராமத்தில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய அளவில் இந்த மசூதி கட்டப்பட உள்ளது. குடியரசு தினத்தன்று காலை 8.30 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி, மரக்கன்றுகளை நட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று இந்தோ - இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் நிர்வாகிகளால் நடத்தப்பட்டது. அப்போது மசூதி கட்டுவதற்கு வருமானவரித்துறையின் தடையில்லா சான்றிதழ் பெறுதல், வெளிநாட்டினரிடம் இருந்து நிதி பெறுதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.