கொடைக்கானல்: பொங்கல் விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கொடைக்கானல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.