சென்னை: அஞ்சல்துறை தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் எனக்கூறி மத்திய தபால் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அஞ்சல் துறையின், தமிழ் நாட்டு பிரிவிற்கு, கணக்காளர்களை துறைத்தேர்வு மூலம் தேர்வு செய்ய சென்னை மண்டல தலைமை தபால் துறை அதிகாரியினால் வெளியிடப்பட்ட பொது அறிவிக்கையில் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதியன்று நடைபெறவுள்ள தேர்வில், ஆங்கிலம் அல்லது இந்தி மொழி வாயிலாக மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.