சொல்லிட்டாங்க...

* வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய பாஜ அரசு உடனே வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

* அதிமுக கூட்டணி நெருக்கடியில் உள்ளது. எங்கள் கூட்டணியில் அப்படி எதுவும் இல்லை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு, நீதிமன்றம் அமைக்கும் குழுவை ஆயுதமாக பயன்படுத்தி விவசாயிகளை வஞ்சிக்கும் ஆபத்து இருப்பதை மறுக்க இயலாது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* கொரோனா தடுப்பூசிகள் அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், நிலைமை சீரடைந்த பின்னர் பள்ளிகளை திறப்பதுதான் சரியானதாக இருக்கும். - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

Related Stories: