சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருச்சி,மதுரை, விழுப்புரம், புதுவை ,அரியலூர் ,பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, புதுக்கோட்டை ,சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள் கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின கன மழையும் பெய்யக்கூடும்.